Sunday, September 20, 2009

கண்களால் காதல் செய்!


அவன் :





உன்


விழி பேசியதை


மொழி பெயர்த்தால்


கவிதை என்கிறார்கள்.




இதயத்தில் நிறைந்து


விழி வழியே


வழிகிறது


நம் காதல்!




பார்த்து பார்த்து


செய்த கண்கள் உனக்கு!


அதைப் பார்த்துக்


கொண்டிருப்பதற்காகவே


செய்த கண்கள் எனக்கு!




தினமும்


உன் வருகைக்காகக்


காத்திருக்கின்றன..


பகலில் என் கண்களும்..


இரவில் என் கனவும்..




உனக்குத் தெரியுமா?


நம் கண்களும் கூடக்


காதலிக்கின்றன!


தொட்டுக் கொள்ளாமல்


அவை ஆயிரம்


க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!


நம்மைப் போல…




திறந்தே இருப்பதால்தான்


என்செவியில் உன்வார்த்தைகள்


ஒலிக்கிறதென்றால்,


இமைகள் மூடிய பின்னும்


என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…


அது எப்படி?




என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?


எல்லாக் கணமும் உன் கண்களைப்


பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!


உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே


என் கண்களும் இமைப்பதைப் பார்!




அவள் :



போதும்…போதும்…


கவிதைகள் கொஞ்சம்


ஓய்வெடுக்கட்டும்!


நீ கண்களால் மட்டும்


காதல் செய்!

_
___***************____


No comments:

Post a Comment